ADDED : மார் 17, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் இன்னர்வீல் சங்கம் சார்பில் கலசலிங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் கருப்பைவாய் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
சங்க தலைவி உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். டாக்டர் ராதா வரவேற்றார். கருத்தரங்கில் ஜோசப் மருத்துவமனை டாக்டர் கிரேஸ் புற்றுநோய் பற்றிய விளக்கங்களை கூறினார். இன்னர் வீல் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், கல்லுாரி பேராசிரியைகள், மாணவிகள் பங்கேற்றனர். ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

