ADDED : மார் 09, 2026 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் சட்டங்கள், திட்டங்கள் குறித்த கருத்தரங்கு நடந்தது.
கலெக்டர் சுகபுத்ரா பேசியதாவது: மகளிர் உதவி எண் 181ஐ தொடர்பு கொள்ளலாம். ஒருங்கிணைந்த சேவை மையங்கள், காவலன் செயலியின் மூலம் அவசர உதவி வழங்கப்படும். அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், என்றார். முரண்பட்ட சிறுவர்கள் 7 பேருக்கு சுயதொழில் புரிந்திட தேவையான உபகரணங்களை வழங்கினார்.
முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார், விருதுநகர் இளைஞர் நீதிக்குழுமம் முதன்மை நடுவர் நிஷாந்தினி, நேர்முக உதவியாளர் பிரதவுஸ் பாத்திமா, மாவட்ட சமூக நல அலுவலர் திலகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, நன்னடத்தை அலுவலர் பால் இக்னேசியஸ் சேவியர்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

