/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பஸ்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்
/
பஸ்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்
ADDED : பிப் 28, 2024 06:18 AM
விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய ராஜபாளையம் வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், குழந்தை திருமணம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, போக்சோ சட்டம் குறித்து அரசு பஸ்களில் ஸ்டிக்கர்களை ஒட்டும் விழிப்பணர்வு நிகழ்ச்சி நடந்தது.
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி தலைமை வகித்தார். அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் துரைசாமி முன்னிலை வகித்தார். விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் நின்ற அனைத்து பஸ்களிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினர்.
மண்டல துணை மேலாளர் மாரிமுத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், வேர்ல்டு விஷன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், சமூக பணியாளர் கார்த்திகை ராஜன் கலந்து கொண்டனர்.

