sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆண்டாள் கோயிலுக்கு வரும் வெளியூர் ஐயப்ப பக்தர்கள் அதிகரிக்கும் பால்கோவா விற்பனை

/

ஆண்டாள் கோயிலுக்கு வரும் வெளியூர் ஐயப்ப பக்தர்கள் அதிகரிக்கும் பால்கோவா விற்பனை

ஆண்டாள் கோயிலுக்கு வரும் வெளியூர் ஐயப்ப பக்தர்கள் அதிகரிக்கும் பால்கோவா விற்பனை

ஆண்டாள் கோயிலுக்கு வரும் வெளியூர் ஐயப்ப பக்தர்கள் அதிகரிக்கும் பால்கோவா விற்பனை


ADDED : நவ 18, 2024 07:17 AM

Google News

ADDED : நவ 18, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : கேராளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலிலுக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்ய வருவதால் பால்கோவா விற்பனையும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

ஆண்டு தோறும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மண்டல பூஜை துவங்கி, மகர ஜோதி வரை ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, ஆரியங்காவு, புனலூர் வழியாக பம்பை சென்று ஐயப்பனை தரிசிக்க வருகின்றனர். இதில் ஐயப்பன் கோயில் செல்லும் போதும், திரும்பும் போதும் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐயப்பன் கோயில் மண்டல பூஜை துவங்கியநிலையில், தமிழகத்தின் பல்வேறு வெளிமாவட்ட பக்தர்கள் அதிகளவில் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். இதனால் கோயில் மாடவீதி, ரதவீதிகளை சுற்றியுள்ள பால்கோவா கடைகளில் பால்கோவா விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us