ADDED : டிச 31, 2025 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் ஸ்டேட் வங்கி முன்பு அனைத்து வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகி கபில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஐந்து நாள் வேலை முறை ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தேசிய வங்கி ஊழியர் சம்மேளனம் செந்தில்குமார், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் நாராயணசாமி, வங்கி அதிகாரிகள் சங்கம் செந்தில்குமார், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் மாரிக்கனி உட்பட ஊழியர்கள் 65 பேர் பங்கேற்றனர்.

