ADDED : பிப் 11, 2026 06:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய தி.மு.க., அரசை கண்டித்து விருதுநகரில் பா.ஜ., மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மகளிரணி மாநில பொதுச்செயலாளர் தேன்மொழி தலைமை வகித்தார்.
செயலாளர் ஜெயந்தி, விருதுநகர் மகளிரணி மாவட்ட தலைவிகள் ஜீவரத்தினம், பாண்டிமீனா முன்னிலை வகித்தனர்.
மாவட்டத் தலைவர்கள் பாண்டுரங்கன், சரவணதுரை ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல், பிரசார பிரிவு மாநில செயலாளர் கமுதி பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

