நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் செஞ்சிலுவை, செஞ்சுருள் சங்கம், என்.எஸ்.எஸ்., என்.சி.சி., விருதுநகர் ஹிந்து நாடார்கள் அபிவிருத்தி பஞ்சுக்கடை மகமை, எச்.டி.எப்.சி., வங்கி, விடியல் அரிமா சங்கம், ஊஞ்சா தனசாமி -பரிமளா தேவி, இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ரத்ததான முகாம் கல்லுாரிச் செயலாளர் மகேஷ் பாபு தலைமையில் நடந்தது.
இதில் கல்லுாரி முதல்வர் சாரதி, தலைவர் சம்பத்குமார், உள்பட பலர் பங்கேற்றனர்.