ADDED : டிச 28, 2025 04:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் ரோட்டில் முனியாண்டி கோவில் பின்புறம் மலை அடிவாரத்தில் விஜயராகவன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.
இங்கு நேற்று காலை 6:30 மணிக்கு வனகாப்பாளர் ஆனந்தி குழுவினர் ரோந்து செல்லும் போது 7 இடங்களில், வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் நாட்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து போலீசாருக்கு தெரிவித்தனர்.
கிருஷ்ணன்கோவில் போலீசார், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் 7 நாட்டு வெடிகுண்டுகளையும் கைப்பற்றி அழகாபுரி அருகே தனியார் வெடி மருந்து கிடங்கில் பாதுகாப்பாக வைத்தனர்.

