/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புத்தகத் திருவிழா கட்டுரை/ புத்தகம் படித்து வித்தகம் படைக்க குவிந்த கூட்டம் விருதுநகர் புத்தகத் திருவிழா கோலாகலம்
/
புத்தகத் திருவிழா கட்டுரை/ புத்தகம் படித்து வித்தகம் படைக்க குவிந்த கூட்டம் விருதுநகர் புத்தகத் திருவிழா கோலாகலம்
புத்தகத் திருவிழா கட்டுரை/ புத்தகம் படித்து வித்தகம் படைக்க குவிந்த கூட்டம் விருதுநகர் புத்தகத் திருவிழா கோலாகலம்
புத்தகத் திருவிழா கட்டுரை/ புத்தகம் படித்து வித்தகம் படைக்க குவிந்த கூட்டம் விருதுநகர் புத்தகத் திருவிழா கோலாகலம்
ADDED : அக் 06, 2024 04:43 AM
விருதுநகர், : விருதுநகர் கே.வி.எஸ்., பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பபாசி, நுாலக இயக்ககம் சார்பில் புத்தகத்திருவிழா நடந்து வருகிறது. 110 ஸ்டால்களில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தாண்டு குழந்தைகளுக்கான புத்தகங்கள் அதிகளவில் உள்ளதாலும், தற்போது காலாண்டு விடுமுறை என்பதாலும் குட்டீஸ் குஷியாக பெற்றோருடன் வந்து புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.
நாளை(அக். 7) கடைசி நாள். தினமும் காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது, அதை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கு, பட்டிமன்றம் நடந்து வருகிறது. விடுமுறை காலம் என்பதால் மாணவர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
மேலும் மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தக உண்டியல் வழங்கப்பட்டு, அதில் சேகரிக்கும் பணத்தை வைத்து 20 சதவீத தள்ளுபடியில் புத்தகங்களை பெற்று கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. புத்தக உண்டியல் மூலமும் நிறைய மாணவர்கள் புத்தகங்களை பெற்றுள்ளனர். இதே போல் மற்ற வாசகர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியில் புத்தகங்கள் விற்கப்படுகின்றன. வார நாட்களை போல வார இறுதி நாட்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது.