/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் தொடங்கியது புத்தகத்திருவிழா/4c
/
விருதுநகரில் தொடங்கியது புத்தகத்திருவிழா/4c
ADDED : செப் 28, 2024 04:58 AM

விருதுநகர் : விருதுநகரில் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் மரமும், மரபும் என்ற கருத்தை மையமாக கொண்டு 3வது புத்தகத்திருவிழா துவக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் தலைமை வகித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் திறந்து வைத்தனர். கலெக்டர் ஜெயசீலன், எம்.எல்.ஏ., சீனிவாசன் முன்னிலை வகித்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்க செயலாளர் முருகன், சிவகாசி மேயர் சங்கீதா, டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் பங்கேற்றனர்.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: மேற்கு தொடர்ச்சி மலை இந்தியாவிலே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மலை தொடர். இமயமலைக்கு முன்பாகவே வந்தது. இதன் பல்லுயிர் பெருக்கம் அதை சுற்றியுள்ள நம்மையும் வளர்க்கிறது. இங்குள்ள உயிரினங்களே காட்சிப்படுத்தியிருப்பது புத்தகத்திருவிழாவுக்கே சிறப்பு. , என்றார்.
வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேசியதாவது: புத்தகங்களில் இருந்து தான் உங்கள் வாழ்க்கையே ஆரம்பிக்கிறது. ஆனால் இளைஞர்கள் இன்று அலைபேசியில் மூழ்கி கிடக்கிறீர்கள். இது எதிர்காலத்திற்கு சரியாக இருக்காது. அறிவு வளர வேண்டும் என்றால் புத்தகங்கள் வாசிக்க வேண்டும். அவ்வாறு வாசித்தால் தான் நமக்கு புதிய சிந்தனைகள் கிடைக்கும்.உங்களுக்கு வேண்டியவர்களை அழைத்து வந்து புத்கதங்களை வாங்கி செல்லுங்கள், என்றார்.
புத்தகத் திருவிழாவில் நுாற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளன. தினசரி பள்ளி, கல்லுாரி மாணவர்களின் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை நாட்டுப்பற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை சிறப்புரைகள், பட்டிமன்றம் நடக்கின்றன.