sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விருதுநகரில் தொடங்கியது புத்தகத்திருவிழா/4c

/

விருதுநகரில் தொடங்கியது புத்தகத்திருவிழா/4c

விருதுநகரில் தொடங்கியது புத்தகத்திருவிழா/4c

விருதுநகரில் தொடங்கியது புத்தகத்திருவிழா/4c


ADDED : செப் 28, 2024 04:58 AM

Google News

ADDED : செப் 28, 2024 04:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகரில் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் மரமும், மரபும் என்ற கருத்தை மையமாக கொண்டு 3வது புத்தகத்திருவிழா துவக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் தலைமை வகித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் திறந்து வைத்தனர். கலெக்டர் ஜெயசீலன், எம்.எல்.ஏ., சீனிவாசன் முன்னிலை வகித்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்க செயலாளர் முருகன், சிவகாசி மேயர் சங்கீதா, டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் பங்கேற்றனர்.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: மேற்கு தொடர்ச்சி மலை இந்தியாவிலே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மலை தொடர். இமயமலைக்கு முன்பாகவே வந்தது. இதன் பல்லுயிர் பெருக்கம் அதை சுற்றியுள்ள நம்மையும் வளர்க்கிறது. இங்குள்ள உயிரினங்களே காட்சிப்படுத்தியிருப்பது புத்தகத்திருவிழாவுக்கே சிறப்பு. , என்றார்.

வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேசியதாவது: புத்தகங்களில் இருந்து தான் உங்கள் வாழ்க்கையே ஆரம்பிக்கிறது. ஆனால் இளைஞர்கள் இன்று அலைபேசியில் மூழ்கி கிடக்கிறீர்கள். இது எதிர்காலத்திற்கு சரியாக இருக்காது. அறிவு வளர வேண்டும் என்றால் புத்தகங்கள் வாசிக்க வேண்டும். அவ்வாறு வாசித்தால் தான் நமக்கு புதிய சிந்தனைகள் கிடைக்கும்.உங்களுக்கு வேண்டியவர்களை அழைத்து வந்து புத்கதங்களை வாங்கி செல்லுங்கள், என்றார்.

புத்தகத் திருவிழாவில் நுாற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளன. தினசரி பள்ளி, கல்லுாரி மாணவர்களின் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை நாட்டுப்பற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை சிறப்புரைகள், பட்டிமன்றம் நடக்கின்றன.

தினமலர் ஆண்டு சந்தா ரூ.1999 செலுத்தினால்

ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்கள் இலவசம் புத்தகத் திருவிழாவில் தினமலர் நாளிதழின் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் ஸ்டாலில்(ஸ்டால் எண் 88) புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் கிடைக்கின்றன. அந்துமணியின் பார்த்தது கேட்டது படித்தது 15 பாகங்கள், தொகுப்பாசிரியர் சமஸ் எழுதிய சோழர்கள் இன்று, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை எழுதிய உங்களில் ஒருவன், மகா பெரியவா, பொன்னியின் செல்வன், பச்சை புடவைக்காரி, புத்தக தொகுதிகள், ஆன்மிக, அறிவியல், நவீன கதை, தன்னம்பிக்கை, மொழிபெயர்ப்பு புத்தகங்கள் இங்குள்ளன. தினமலர் ஆண்டு சந்தா ரூ.1999 செலுத்தினால் ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்களை இலவசமாக பெறலாம்.








      Dinamalar
      Follow us