sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசியில் கல்லுாரி மாணவரை கொலை செய்த சிறுவன் கைது

/

சிவகாசியில் கல்லுாரி மாணவரை கொலை செய்த சிறுவன் கைது

சிவகாசியில் கல்லுாரி மாணவரை கொலை செய்த சிறுவன் கைது

சிவகாசியில் கல்லுாரி மாணவரை கொலை செய்த சிறுவன் கைது


ADDED : ஜன 13, 2025 01:00 AM

Google News

ADDED : ஜன 13, 2025 01:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் தங்கையை காதலித்த கல்லுாரி மாணவரை கத்தியால் குத்தி கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி அருகே திருத்தங்கலை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் வீரமாணிக்கம் 18. இவர் சாத்துார் அரசு கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவரை தான் வசிக்கும் பகுதியின் கால்நடை மருந்தகம் அருகே நடந்து சென்ற போது மர்ம நபர் கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றார். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரமாணிக்கம் உயிரிழந்தார். அவரை கொலை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த கட்டட வேலை செய்யும் 17 வயது சிறுவனை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், வீரமாணிக்கம் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு சிறுமியின் அண்ணன் உறவு முறையான 17 வயது சிறுவன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் வீரமாணிக்கத்திற்கும், சிறுவனுக்கும் இடையே பிரச்னை இருந்தது. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் சிறுவன் கத்தியால் குத்தியதில் வீரமாணிக்கம் உயிரிழந்தார். இச்சவம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரிக்கிறோம் என்றனர்.






      Dinamalar
      Follow us