தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குழாய் உடைந்து குடிநீர் வீண்

குழாய் உடைந்து குடிநீர் வீண்

குழாய் உடைந்து குடிநீர் வீண்


ADDED : ஆக 24, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை, ஆக. 25-

அருப்புக்கோட்டையில் ரோடு அருகே தாமிரபரணி குடிநீர் பகிர்மான குழாய் உடைந்து தண்ணீர் வீணாக ஓடுகிறது.

அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அருப்புக்கோட்டை - சுக்கிலநத்தம் ரோட்டில் நகராட்சி குப்பை கிடங்கு பாலத்தின் பக்கத்தில் பகிர்மான குழாய் உடைந்து குடிநீர் பீய்ச்சி அடிக்கிறது. ஏற்கனவே கிராம பகுதியில் பகுதிகளில் குடிநீர் பஞ்சம் உள்ள நிலையில், குழாய் உடைந்து குடிநீர் 2 நாட்களாக வெளியேறுவதாக மக்கள் புலம்புகின்றனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடைந்த குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us