sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தம்பியின் தொடர்பு விவகாரம் அண்ணனை கொன்றோர் கைது

/

தம்பியின் தொடர்பு விவகாரம் அண்ணனை கொன்றோர் கைது

தம்பியின் தொடர்பு விவகாரம் அண்ணனை கொன்றோர் கைது

தம்பியின் தொடர்பு விவகாரம் அண்ணனை கொன்றோர் கைது


ADDED : ஜூலை 10, 2025 08:17 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 08:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் அருகே தம்பி காதல் பிரச்னையில் அண்ணனை, வெட்டி கொலை செய்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்துார் ஒத்தையாலைச் சேர்ந்தவர் சங்கேஸ்வரன். பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, அவரை சிலர் வெட்டிக்கொலை செய்தனர்.

கொலை குறித்து போலீசார் கூறியதாவது:

சங்கேஸ்வரனின் சித்தப்பா மகன் சிங்கீஸ்வரன், 18. பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலித்ததாக கூறப்படுகிறது.

சிறுமி ஏற்கனவே கோவில்பட்டி விஜயபாண்டி என்பவருடன் பழகியதாக தெரிகிறது. எனவே அவர், சிறுமியுடன் பேசக்கூடாது என சிங்கீஸ்வரனை எச்சரித்தார். அவர் தன் அண்ணன் சங்கேஸ்வரனிடம் கூறினார்.

சங்கேஸ்வரன், விஜயபாண்டியுடன் சமரசம் பேசுவதற்காக, தான் பணிபுரியும் பட்டாசு ஆலைக்கு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு, நேற்று முன்தினம் மாலை வரவழைத்தார்.

அப்போது ஏற்பட்ட தகராறில், விஜயபாண்டி, அவரது நண்பர்கள் ராஜபாண்டி, மகேஸ்வரன், அபி, 20, பரணி, 21, ஆகியோர், சங்கேஸ்வரனை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தனர்.

அவர்களில் மூன்று பேரை கைது செய்துள்ளோம். தலைமறைவாக உள்ள அபி, பரணியை தேடி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us