sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

காரியாபட்டியிலிருந்து திருப்பரங்குன்றம் வழியாக பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்

/

காரியாபட்டியிலிருந்து திருப்பரங்குன்றம் வழியாக பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்

காரியாபட்டியிலிருந்து திருப்பரங்குன்றம் வழியாக பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்

காரியாபட்டியிலிருந்து திருப்பரங்குன்றம் வழியாக பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்


ADDED : ஜன 18, 2024 05:26 AM

Google News

ADDED : ஜன 18, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து திருப்பரங்குன்றம், அவனியாபுரம் வழியாக காரியாபட்டிக்கு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

காரியாபட்டி பகுதியில் அதிக அளவில் முருக பக்தர்கள் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்று வருவர். அது மட்டுமல்ல வாரத்திற்கு ஒரு முறை, மாதத்திற்கு 3 முறை என பலரும் கோயிலுக்கு சென்று வருகின்றனர்.

பெரியார் பஸ் ஸ்டாண்ட் சென்று, அங்கிருந்து திருப்பரங்குன்றம் பஸ் ஏறி சென்று வருவதால் நேரம் விரயமாவதாக பக்தர்கள் சிரமப்படுகின்றனர். பல கி.மீ., சுற்றிச் சென்று பல்வேறு பஸ்கள் மாறி வரவேண்டியிருப்பதால் உரிய நேரத்திற்கு கோயிலுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

மதுரை டெப்போவிலிருந்து 30க்கு மேற்பட்ட டவுன் பஸ்கள், காரியாபட்டி டெப்போவில் இருந்து 10க்கும் மேற்பட்ட பஸ்கள் தினமும் தலா 5-6 முறை மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து காரியாபட்டிக்கு இயக்கப்பட்டு வருகின்றன. பெருங்குடி, அவனியாபுரம், தெற்கு வாசல், பெரியார் பஸ் ஸ்டாண்ட் செல்கிறது.

இதில் ஒரு சில பஸ்களை பெருங்குடி, அவனியாபுரம், திருப்பரங்குன்றம், பழங்காநத்தம் வழியாக பெரியார் பஸ் ஸ்டாண்ட்க்கு இயக்கினால் திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்கள் எளிதில் கோயிலுக்கு சென்று வர முடியும். இதனை கருத்தில் கொண்டு இந்த வழித்தடத்தில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us