sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

புது பஸ் ஸ்டாண்டிற்கு அறிவித்த வழித்தடத்தில்  வரமறுக்கும் பஸ்கள்

/

புது பஸ் ஸ்டாண்டிற்கு அறிவித்த வழித்தடத்தில்  வரமறுக்கும் பஸ்கள்

புது பஸ் ஸ்டாண்டிற்கு அறிவித்த வழித்தடத்தில்  வரமறுக்கும் பஸ்கள்

புது பஸ் ஸ்டாண்டிற்கு அறிவித்த வழித்தடத்தில்  வரமறுக்கும் பஸ்கள்


ADDED : அக் 18, 2024 04:42 AM

Google News

ADDED : அக் 18, 2024 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டிற்குள் மீனாம்பிகை பங்களா வழியாக 2ம் நாள் பஸ்கள் நேற்றும் இயக்கப்பட்டது. இதில் திருமங்கலம் பஸ்கள் காலை 9:00 மணிக்கும், சிவகாசி பஸ்கள் சில வந்த வழித்தடத்திலே திரும்பியதால் மக்கள் சிரமப்பட்டனர்.

30 ஆண்டுகளாக செயல்படாத விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் இந்தாண்டு ஆக. 21 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. துவக்கம் முதலே அரசியல் வாதிகளின் ஓட்டு அரசியலால் பஸ் ஸ்டாண்டிற்கு எதிர்ப்பு நிலவி வந்தது.

மீனாம்பிகை பங்களா வழியாக பஸ்கள் இயக்க வேண்டும் என ஒரு தரப்பு கோரிக்கை வைத்து வந்தது.

இவர்களது கோரிக்கையை அக். 16 முதல் விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட்டிற்கு சிவகாசி, திருமங்கலம் பஸ்கள் மீனாம்பிகை பங்களா வழியாக இயக்கப்படும் என வழித்தட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.

போக்குவரத்து கழக அதிகாரிகள் மெத்தனம்


இந்நிலையில் நேற்று முன் தினம் காலை முதலே பஸ்கள் சரிவர வாரமல் இருந்தன. 2ம் நாளாக நேற்றும் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட வேண்டிய திருமங்கலம் பஸ் காலை 9:00 மணிக்கு தான் வந்து சேர்ந்தது.

அதுவரை மீனாம்பிகை பங்களா, பழைய பஸ் ஸ்டாண்டில் ஆட்களை ஏற்றி சென்று விட்டது. அதே போல் 2ம் நாளாக எம்.ஜி.ஆர்., சாலை வழியாக வர வேண்டிய சில சிவகாசி பஸ்கள் நேராக மீனாம்பிகை பங்களா, பழைய பஸ் ஸ்டாண்ட் வரை சென்றது.

சிவகாசி பஸ்கள் எம்.ஜி.ஆர்., சாலையை புறக்கணிப்பது நாளடைவில் மக்கள் புது பஸ் ஸ்டாண்டிற்கு வருவதன் நம்பிக்கையை குறைக்கும். அருகே உள்ள மீனாம்பிகை பங்களா, பழைய பஸ் ஸ்டாண்டிலே பஸ் ஏறி கொள்ளலாம் என்ற நிலை ஏற்படும். கோரிக்கை வைத்தது போன்று மீனாம்பிகை பங்களாக வழியாக பஸ்கள் இயக்கப்பட்டும், 2ம் நாளாக அதை மீறி சில பஸ்கள் எம்.ஜி.ஆர்., சாலை வழித்தடத்தை புறக்கணிப்பதும், திருமங்கலம் பஸ்கள் வராமல் இருப்பதும் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் முடிவுக்கு போக்குவரத்து கழகம் ஒத்துழைப்பு தருவதை கலெக்டர் உள்ளிட்ட உயரதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us