/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மழையால் கிராமங்களை மறந்த பஸ்கள் பயணிகள் அவதி
/
மழையால் கிராமங்களை மறந்த பஸ்கள் பயணிகள் அவதி
ADDED : ஆக 07, 2025 07:04 AM
காரியாபட்டி : காரியாபட்டி பகுதிகளில் மழையாலும், சேறும், சகதியுமான மாற்றுப்பாதையாலும் கிராமங்களுக்குள் செல்ல பஸ் டிரைவர்கள் மறுப்ப தால் பயணிகள் சிரமப் படுகின்றனர்.
காரியாபட்டியில் இருந்து நரிக்குடி, அ.முக்குளம், திருச்சுழி வழித் தடத்தில் பல்வேறு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அந்தந்த வழித்தடங்களில் உள்ள பல்வேறு கிராமங் களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
வேலைக்கு செல் பவர்கள், பள்ளி மாணவர்கள் என பலருக்கும் பயனுள்ளதாக உள்ளது. பள்ளி நேரத்தில் பஸ்கள் இயக்குவது மாணவர் களுக்கு வசதியாக உள்ளது. இந்நிலையில் தற்போது மாலை நேர மழை பெய்கிறது. ரோட்டில் அங்கங்கே மழை நீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
எஸ்.கடமங்குளத்தில் ஓடையின் குறுக்கே இரு இடங்களில் பாலம் கட்டும் பணி நடக்கிறது. போக்குவரத்துக்காக மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், சரிவர அமைக்காததால் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.
காரியாபட்டியில் இருந்து எஸ்.கடமங்குளம், சத்திரம் புளியங்குளம் வழியாக எசலிமடை, தாமரைக் குளம் வரை செல்லும் பஸ்கள், விபத்து ஏற் படுமோ என டிரைவர்கள் இயக்க மறுக்கின்றனர்.
4 நாட்களாக பஸ்களை இயக்காததால் பயணிகள் பரிதவித்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள், வெளியூர் வேலைக்கு செல்பவர்கள் என பலரும் மெயின் ரோட்டில் இருந்து 2, 3 கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டிய அவலம் உள்ளது.
அவ்வப்போது பெய்யும் மழையில் மாணவர்கள் நனைகின்றனர். பால பணிகள் நடக்குமிடத்தில் மண் மெத்திய தரமான மாற்றுப்பாதை அமைப்பது அவசியம். அதனை சரிவர செய்யாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே போக்குவரத்தை சீராக்க, மாற்று பாதையை தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.