sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

உத்தரவை மீறும் சுற்றுலா பயணிகளால் - விழி பிதுங்கும் வனத்துறையினர்

/

உத்தரவை மீறும் சுற்றுலா பயணிகளால் - விழி பிதுங்கும் வனத்துறையினர்

உத்தரவை மீறும் சுற்றுலா பயணிகளால் - விழி பிதுங்கும் வனத்துறையினர்

உத்தரவை மீறும் சுற்றுலா பயணிகளால் - விழி பிதுங்கும் வனத்துறையினர்


ADDED : நவ 05, 2024 04:45 AM

Google News

ADDED : நவ 05, 2024 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் வனத்துறையினரின் உத்தரவை மீறி வனப்பகுதி ஆறுகளில் விபரீதம் தெரியாமல் குளிப்பதற்காக குவியும் சுற்றுலா பயணிகளை கண்காணித்து கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு வனத்துறையினர் ஆளாகியுள்ளனர்.

தொடர்மழையால் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தடுப்பணையை வேறு பாயும் வெள்ள நீர் ஆற்றில் செல்வதை கண்டு களித்து குளித்து மகிழ சிவகாசி, விருதுநகர், சேத்துார் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் ராஜபாளையம் அய்யனார் கோயில், அணைத்தலை ஆறு, ராக்காச்சி அம்மன் கோயில் பகுதிகளில் இரண்டு நாளாக குவிந்து வருகின்றனர்.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் மற்றும் கன மழையால் வனத்துறையினர் ஆற்றில் குளிக்க தடை விதித்துள்ளனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் வனத்துறையினரின் தடையை மீறி குளிக்க முற்பட்டு வருகின்றனர். தடுப்பவர்களிடம் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்: சில நாட்களுக்கு முன் ராக்காச்சி அம்மன் கோயில் , அய்யனார்கோயில் பகுதியில் தடையை மீறி பயணிகள் சென்றதால் இரவு வரை போராட வேண்டி இருந்தது. இந்நிலையை முதலிலேயே தடுக்க வேண்டும் என்ற அதிகாரிகளின் உத்தரவை தான் செயல்படுத்துகிறோம் என்பது சுற்றுலா பயணிகளுக்கு புரிவதில்லை. தீபாவளி ஒட்டிய விடுமுறை என்பதால் மது போதையில் அதிகம் பேர் ஆற்று பகுதிக்கு வருகின்றனர். விபரீதம் ஏற்படுவதை தவிர்க்க இவர்களை தடுப்பதை தவிர வேறு வழி இல்லை.






      Dinamalar
      Follow us