ADDED : பிப் 09, 2024 04:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அருகே சின்ன பேராலியைச் சேர்ந்தவர் பாலமுருகன் 36.
இவர் சொந்த வேலைக்காக காரில் காரியப்பட்டி சென்றுவிட்டு பாண்டியன் நகர் ரோட்டில் வந்த போது ஏ.சி., சுவிட்ச்சில் புகை வந்தது. இதை தண்ணீர் ஊற்றி அணைத்தும் தீயை கட்டுப்படுத்த முடியாததால் காரை விட்டு இறங்கினார். தீயணைப்புத்துறை வருவதற்குள் கார் முழுவதும் எரிந்து கருகியது. ஊரகப் போலீசார் விசாரிக்கின்றனர்.

