UPDATED : ஜூன் 27, 2026 04:52 PM
ADDED : ஜூன் 27, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
திருச்சுழி:திருச்சுழி அருகே பச்சேரியை சேர்ந்தவர் தினேஷ் குமார், 38, இவர் நேற்று முன்தினம் இரவு காரை வீட்டின் முன்பு நிறுத்தி உள்ளார்.
அதிகாலையில் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் தாமோதரன், நிலையஅலுவலர் முனீஸ்வரன் தலைமையில், வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.
