/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அக்கா, தங்கை பலாத்காரம் 5 பேர் மீது வழக்கு
/
அக்கா, தங்கை பலாத்காரம் 5 பேர் மீது வழக்கு
ADDED : மார் 20, 2024 12:26 AM
அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே அக்கா , தங்கையை பலாத்காரம் செய்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அருப்புக்கோட்டை அருகே கிராமத்தை சேர்ந்த 27 வயது பெண் , அவரது 25 வயது தங்கையும் அருகே உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். அங்கு சம்பள பணத்தை வாங்க செல்வதற்காக 27 வயது பெண் அருப்புக் கோட்டை அருகே மற்றொரு கிராமத்தில் வசிக்கும் தனது தங்கை வீட்டிற்கு வந்த போது, அவர்களுக்கு அறிமுகமான ராஜ்குமார் அங்கு வந்து, 'உங்களுடைய மாமா ரவிச்சந்திரனுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது' என கூறி, இருவரையும் பைக்கில் வாழ்வாங்கி காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு, அடையாளம் சொல்லக்கூடிய 4 நபர்கள் ராஜ்குமாரை அடிப்பது போல் விரட்டிவிட்டு, அக்கா, தங்கையை பலாத்காரம் செய்து தப்பினர். போலீசார் ராஜ்குமார் உட்பட, ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

