/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு ஆக.28க்கு ஒத்திவைப்பு
/
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு ஆக.28க்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு ஆக.28க்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு ஆக.28க்கு ஒத்திவைப்பு
ADDED : ஆக 14, 2025 03:23 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்கின் விசா ரணையை ஆக.28 க்கு ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
விருதுநகர் மாவட்டம் சாத்துாரை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது சகோதரி மகனுக்கு ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி அ.தி.மு.க. நிர்வாகி விஜய் நல்லதம்பி ரூ.30 லட்சம் வாங்கிவிட்டு ஏமாற்றியதாக 2021ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ரவீந்திரன் புகார் அளித்தார்.
இதனையடுத்து விஜய் நல்ல தம்பி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது நண்பர்கள் முத்துப்பாண்டி, மாரியப்பன், பாண்டியராஜன், ரவி கணேசன், ராமகிருஷ்ணன், நாகேஷா ஆகியோர் மீதும்,
ராஜேந்திர பாலாஜி பணம் பெற்று தன்னை ஏமாற்றியதாக விஜய நல்லதம்பி புகாரில் ராஜேந்திர பாலாஜி, அவரது நண்பர்கள் பாபுராஜ், பலராமன், பாண்டிய ராஜன், ரவி கணேசன், ராம கிருஷ்ணன், நாகேஷா ஆகிய 7 பேர் மீதும் விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளில் ஏப். 15 அன்று 600 பக்கங்கள் கொண்ட 2 கூடுதல் குற்றப்பத்திரிகைகளைபோலீசார் தாக்கல் செய்தனர். இதனையடுத்து ஜூலை 16ல் வழக்கு விசாரணை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. பின்னர் ஆக.13க்கு ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விஜய நல்லதம்பி, ராஜேந்திர பாலாஜியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மற்றவர்கள் ஆஜராகினர்.ஆனால் அனைவரும் ஆஜராகாததால் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படவில்லை. பின்னர் வழக்கு விசாரணையை ஆக. 28க்கு நீதிபதி ஜெயக்குமார் ஒத்தி வைத்தார்.