sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பட்டாசு ஆலை பெயரை போலியாக பயன்படுத்திய 13 பேர் மீது வழக்கு

/

பட்டாசு ஆலை பெயரை போலியாக பயன்படுத்திய 13 பேர் மீது வழக்கு

பட்டாசு ஆலை பெயரை போலியாக பயன்படுத்திய 13 பேர் மீது வழக்கு

பட்டாசு ஆலை பெயரை போலியாக பயன்படுத்திய 13 பேர் மீது வழக்கு


ADDED : மார் 25, 2025 05:53 AM

Google News

ADDED : மார் 25, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசியில் பிரபல பட்டாசு ஆலையின் பெயர், லோகோ படத்தை பயன்படுத்தி போலியாக பட்டாசு விற்பனை செய்த 13 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், பிரின்டிங் பிரஸ் உரிமையாளர்கள் 3 பேரை கைது செய்தனர்.

சிவகாசியில் ஸ்டாண்டர்டு பட்டாசு ஆலை பதிவு செய்த பெயர் மற்றும் லோகோ படத்தை பயன்படுத்தி மோசடி செய்து சந்தையில் பட்டாசு விற்பனை செய்யப்படுவதாக ஆலை மேலாளர் வளையாபதி கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணையில் சாத்துார் மேலபுதுாரை சேர்ந்த ஜான்சன், சிவகாசி அய்யாதுரை, மருதமுத்துகுமார், மனோஜ் குமார், ஹரிஷ், ராஜன், ரோஹித், சிவகலைரத்தினம், சிவபாலாஜி, வீராசாமி, கணேசன், கண்ணன், முனியசாமி ஆகிய 13 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.

பிரின்டிங் பிரஸ் உரிமையாளர்கள் ஜான்சன், அய்யாதுரை, மருதமுத்துகுமார் ஆகிய 3 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், அவர்களை ஏப். 4 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us