ADDED : அக் 10, 2025 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அருகே பெரிய மருளுத்தை சேர்ந்தவர் பா.ஜ., தெற்கு ஒன்றிய தலைவர் கோபி. இவர் மத்திய பிரதேசத்தில் முதல்வர் ஸ்டாலின் உருவபொம்மையை எரித்தது தொடர்பாக தனது முகநுால் பக்கத்தில் பதிவிட்டு, அத்துடன் தவறான கருத்துக்களையும் பதிவிட்டார்.
இவர் மீது தி.மு.க., இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்திகேயன் புகார் அளித்தார். சூலக்கரை போலீசார் கோபி மீது வழக்கு பதிந்தனர்.