/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாலிபரை தாக்கிய போலீசார் மீது வழக்கு
/
வாலிபரை தாக்கிய போலீசார் மீது வழக்கு
ADDED : ஜன 01, 2026 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: விருதுநகர் மாவட்டம், நரிக்குடியைச் சேர்ந்த தவக்கண்ணன், புதிய பாஸ்போர்ட் விசாரணைக்காக, 2020 மார்ச் 21ல் அ.முக்குளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அன்று இரவு, ஸ்டேஷனில் இருந்த ' வாக்கி டாக்கி' காணாமல் போனது தெரிந்தது.
அதை, தவக்கண்ணன் தான் திருடியதாக, அவரை தாக்கிய போலீசார், வழக்கும் பதிந்தனர்.
கடந்த 2024ல் திருச்சுழி நீதிமன்றம் விசாரித்து, அவரை விடுதலை செய்தது . அவரை தாக்கி, பொய் வழக்கு பதிவு செய்த எஸ்.ஐ., மணிகண்டன், ஏட்டு செல்வராஜ் மீது, நீதிபதி சுந்தர் மோகன் உத்தரவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

