ADDED : ஜன 01, 2026 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்துார் வருவாய் கோட்டங்களில் ஜன. 13ல் நடக்கிறது. சப் கலெக்டர், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் நடக்கிறது.
கோட்ட அளவிலான கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன், விவசாயம், தனி நபர் தொடர்பான மனுக்களை நேரடியாக மனு அளித்து தீர்வு காணவும், வட்டார அளவிலான விவசாயம், விவசாயம் சாராத மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு நடவடிக்கை விபரத்தை மனுதாரருக்கு அனைத்துத்துறை அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும், என்றார்.

