sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கண்மாயில் வளரும் சம்பை செடிகள்

/

கண்மாயில் வளரும் சம்பை செடிகள்

கண்மாயில் வளரும் சம்பை செடிகள்

கண்மாயில் வளரும் சம்பை செடிகள்


ADDED : நவ 25, 2024 05:32 AM

Google News

ADDED : நவ 25, 2024 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி : காரியாபட்டி எம்.இலுப்பைகுளம் கண்மாயில் வளர்ந்துள்ள சம்பை செடிகளால் நோய் பரவும் அபாயம் இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

காரியாபட்டி எம்.இலுப்பைகுளத்தில் கண்மாய், ஊருணி உள்ளிட்ட நீர்நிலைகளில் சம்பை செடிகள் வளர்ந்துள்ளன.

இதில் விஷ பூச்சிகள் தங்கி வருகின்றன. புதர்மண்டி கிடப்பதால் காட்டுப் பன்றிகள் தங்குகின்றன.

ஆட்கள் தனியாக நடந்து செல்ல முடியவில்லை. இது ஒரு புறம் இருக்க, இதில் பூத்துள்ள பூக்களிலிருந்து துாசு காற்றில் பரவி உணவுப் பொருட்கள், குடிநீரில் கலக்கின்றன. கண்களில் பட்டு காயப் படுத்துகின்றன.

சுவாசிக்க முடியவில்லை. மூச்சு திணறல் ஏற்படுகிறது. உணவுகளை சாப்பிடும் போது, துாசுகளும் உணவுடன் கலப்பதால் உடல் உபாதை ஏற்பட்டு, பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகிறது.

இதன் வேர்கள் நீண்ட தூரத்திற்குச் செல்வதால் நீர் கசிவு ஏற்பட்டு கண்மாயில் நீரை சேர்க்க முடியவில்லை.

மக்கள் பாதிக்கப்படும் முன் நீர்நிலைகளில் வளர்ந்துள்ள சம்பை செடிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us