sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மழையின்றி வறண்டு வரும் சதுரகிரி மலை

/

மழையின்றி வறண்டு வரும் சதுரகிரி மலை

மழையின்றி வறண்டு வரும் சதுரகிரி மலை

மழையின்றி வறண்டு வரும் சதுரகிரி மலை


ADDED : ஆக 09, 2025 11:37 PM

Google News

ADDED : ஆக 09, 2025 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: கடும் வெயிலின் தாக்கத்தால் சதுரகிரி மலை வறண்டு செடி, கொடிகள் காய்ந்து அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வருவதால் வனத்துறையினர் தீயை அணைக்க சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஓடைகள் வறண்டு தண்ணீர் இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால் செடி, கொடிகள் பசுமை தன்மையை இழந்து காய்ந்து காணப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 10 நாட்களில் தாணிப்பாறையில் இருந்து கோயிலுக்கு செல்லும் மலைப்பகுதியிலும், சாப்டூர் வனச்சரக பாதையிலும் காட்டுத்தீ ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைப்பதில் வனத்துறையினர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இருந்தபோதிலும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு தினமும் காலை 6 :00மணி முதல் 10:00 மணி வரை பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதித்துள்ளது. அடிவாரத்தில் இருந்து கோயில் வரை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

விடுமுறை நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் மழை பெய்து பசுமை சூழல் ஏற்பட்டால் தான் தீ விபத்து ஏற்படாத நிலை ஏற்படும் என வனத்துறை என தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us