sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பட்டாசு விபத்துக்களில் இறக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

/

பட்டாசு விபத்துக்களில் இறக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

பட்டாசு விபத்துக்களில் இறக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

பட்டாசு விபத்துக்களில் இறக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு


ADDED : நவ 10, 2024 11:16 PM

Google News

ADDED : நவ 10, 2024 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : ''பட்டாசு விபத்துக்களில் இறக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் ''என விருதுநகரில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

விருதுநகரில் ரூ.77.12 கோடியில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். கலெக்டர் ஜெயசீலனை இருக்கையில் அமர வைத்து புகைப்படம் எடுத்தார்.

பின் பட்டம்புதுாரில் நடந்த அரசு விழாவில் ரூ.417 கோடியே 21 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை 57 ஆயிரத்து 556 பயனாளிகளுக்கு வழங்கிய முதல்வர் பேசியதாவது:

விருதுநகர் மாவட்டத்தில் 1256 ஊரக குடியிருப்புகளுக்கு தாமிரபணி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருக்கன்குடி மாரியம்மன் கோயில் திருப்பணிகள், ஒருங்கிணைந்த ஆயத்த ஆடைகள் பூங்கா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3 ஆண்டுகளில் விருதுநகர் மாவட்ட ஊரக 257 ரோடு பணிகள் முடிக்கப்பட்டு 37 ரோடு பணிகள் நடந்து வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் 95 சதவீத பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக புதுமைப்பெண், நான் முதல்வன், தமிழ்புதல்வன், கல்லுாரி கனவு திட்டத்தால் அதிகளவு மாணவர்கள் உயர்கல்விக்கு சேர்ந்துள்ளனர். இதற்காக விருதுநகர் கலெக்டர் ஜெயசீலனுக்கு நல் ஆளுமை விருது வழங்கி உள்ளேன்.

பட்டாசு விபத்துக்களில் இறக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும். மாவட்ட அளவிலேயே முடிவு செய்து கலெக்டர் வழங்க கூடிய வகையில் இதற்கான தனி நிதியம் உருவாக்கப்படும். ரூ.5 கோடி ஒதுக்கப்படும்.

நாளிதழ் ஒன்றின் டாப் 10 சக்தி வாய்ந்த தலைவர் பட்டியலில் என் பெயர் இடம் பெற்றது. இது மக்களாகிய உங்களால் தான். தமிழகத்தை உயர்த்த எல்லா புள்ளி விபரங்களிலும் வளர்ச்சி ↔தொடர்ச்சி 3ம் பக்கம்எதிரொலித்து கொண்டிருக்கிறது. தமிழகத்தை உயர்த்த என் சக்தியை மீறியும் உழைப்பேன். போராடுவேன். நம்மை முந்தி வெற்றி பெற வேண்டும் என பலர் வந்து கொண்டிருக்கின்றனர். எனவே இன்னும் வேகமாக ஓட நினைக்கிறேன்.

மக்களுக்கு பயனில்லாத திட்டங்களை கொண்டு வந்தேன் என் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உளறுகிறார். எனக்கு சிரிப்பு தான் வருகிறது. எதை பயனில்லாத திட்டம் என்கிறீர்கள். பழனிசாமி புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார். கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரையில் உள்ள நுாற்றாண்டு நுாலகம், 1.70 லட்சம் தாய்மார்கள் பெறும் மகளிர் உரிமை தொகை போன்றவற்றை பயனில்லாத திட்டங்கள் என்று கூறுகிறீர்களா.

திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை வைக்காமல் பதவிக்காக கரப்பான் பூச்சி போல் ஊர்ந்து சென்ற உங்கள் பெயரையா வைக்க முடியும். வாய்த்துடுக்கு, ஆணவத்தில் பேசிப்பேசித்தான் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறீர்கள். உங்கள் ஆணவ பேச்சால் மக்கள் உங்களை தொடர்ந்து புறக்கணிப்பர். கருணாநிதி பெயரால் தமிழகத்தை வாழ வைக்க கூடிய திட்டங்களை செயல்படுத்தியதில் நான் பெருமைப்படுகிறேன். அத்திட்டங்களின் வெளிச்சத்தால் எதிர்க்கட்சி தலைவருக்கு கண் கூசுகிறது. என் பணிகள் தொடரும் என்றார்.

அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, கணேசன், எம்.பி.,க்கள் நவாஸ்கனி, மாணிக்கம் தாகூர், தலைமை செயலாளர் முருகானந்தம், எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், தங்கபாண்டியன், ரகுராமன், வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அமுதா பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us