sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குழந்தை திருமணம் சிறுமிகள் கர்ப்பம் கணவர், பெற்றோர் மீது வழக்கு

/

குழந்தை திருமணம் சிறுமிகள் கர்ப்பம் கணவர், பெற்றோர் மீது வழக்கு

குழந்தை திருமணம் சிறுமிகள் கர்ப்பம் கணவர், பெற்றோர் மீது வழக்கு

குழந்தை திருமணம் சிறுமிகள் கர்ப்பம் கணவர், பெற்றோர் மீது வழக்கு


ADDED : ஆக 11, 2025 02:34 AM

Google News

ADDED : ஆக 11, 2025 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் நடந்த குழந்தை திருமணங்களால் சிறுமிகள் கர்ப்பமாகினர். இதனால் கணவர், பெற்றோர் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, 2024ல் அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்தார். அவரின் தாய் வேலை செய்த ஓட்டலுக்கு அடிக்கடி வந்து சென்ற லோடுமேன் ஒருவருடன், சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

இக்காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்து இருவருக்கும் 2024 நவ., 29ல் விருதுநகரில் திருமணம் செய்து வைத்தனர். சிறுமி கர்ப்பமாகி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறந்த தேதியின் படி சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்ததால் கர்ப்பமானது கண்டறியப்பட்டது.

விருதுநகர் மாவட்ட சமூகநலத்துறையின் பரிந்துரையின்படி மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை செய்து கணவர், மாமனார், மாமியார், சிறுமியின் தாய், உறவினர் தம்பதி உட்பட 6 பேர் மீது போக்சோவில் வழக்கு பதிந்தனர்.

வெம்பக்கோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த முனியசாமிக்கும் 21, 16 வயது சிறுமிக்கும் 2025 ஜூன் 6 திருமணம் நடந்தது. சிறுமி தற்போது 2 மாத கர்ப்பமாக உள்ளார். தகவல் அறிந்து சமூக ஊர் நல அலுவலர் ஆறுமுகத்தம்மாள் 58, விசாரித்த போது சிறுமிக்கு வயது 16 என்பதும் பெற்றோர் வற்புறுத்தி கட்டாயத் திருமணம் செய்து வைத்ததும் தெரிந்தது.

சிறுமியின் கணவர் முனியசாமி, அவரின் தந்தை வேதகனி, சிறுமியின் தந்தை பாக்கியராஜ், தாய் உமாராணி, மாமியார் காளீஸ்வரி மீது அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us