sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சித்துராஜபுரம் ரோடு சேதம் வாகன ஓட்டிகள் அவதி

/

சித்துராஜபுரம் ரோடு சேதம் வாகன ஓட்டிகள் அவதி

சித்துராஜபுரம் ரோடு சேதம் வாகன ஓட்டிகள் அவதி

சித்துராஜபுரம் ரோடு சேதம் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : நவ 18, 2024 07:10 AM

Google News

ADDED : நவ 18, 2024 07:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி விளாம்பட்டி ரோடு விலக்கில் இருந்து சித்துராஜபுரம் செல்லும் ரோட்டில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க வேண்டும்.

சிவகாசி விளாம்பட்டி ரோடு விலக்கில் இருந்து சித்துராஜபுரம் 3 கி.மீ., தொலைவில் உள்ளது. சித்துராஜபுரம் மட்டுமின்றி பூலாவூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பிருந்தாவனம் நகர், ராஜதுரை நகர் பகுதி பள்ளி கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் எளிதாக சிவகாசிக்கு வர இந்த ரோட்டினை தான் பயன்படுத்துகின்றனர்.

மேலும் இ.டி., ரெட்டியபட்டி பகுதியில் இருந்தும் மக்கள் சிவகாசிக்கு இந்த ரோட்டில் தான் வருகின்றனர். தவிர பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் வாகனங்களும் இதே ரோட்டில் தான் வந்து செல்கின்றன. இந்நிலையில் ரோடு ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. ஒரு சில இடங்களில் ரோடு சேதமடைந்து பெரிய பள்ளமாக மாறியுள்ளதால் டூவீலரில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர்.

இந்த ரோட்டில் வருகின்ற கார் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் தட்டுத் தடுமாறியே வர வேண்டியுள்ளது. எனவே இப்பகுதியில் சேதம் அடைந்த ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us