/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கூட்டுறவு பணியாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தம்
/
கூட்டுறவு பணியாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தம்
ADDED : அக் 22, 2024 04:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் விற்பனையாளர்களிடம் அபராத தொகையென இருமடங்கு வசூலிப்பதை ரத்து செய்வது, கட்டுப்பாடற்ற பொருட்களை இறக்கி விற்க இலக்கு நிர்ணயிப்பதை கைவிடுவது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் நேற்று முதல் துவங்கியது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு நடந்த அடையாள ஆர்ப்பாட்டத்தில்மாநில துணை தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

