/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி ரயில்வே மேம்பால பணியை ஆய்வு செய்த கலெக்டர்
/
சிவகாசி ரயில்வே மேம்பால பணியை ஆய்வு செய்த கலெக்டர்
சிவகாசி ரயில்வே மேம்பால பணியை ஆய்வு செய்த கலெக்டர்
சிவகாசி ரயில்வே மேம்பால பணியை ஆய்வு செய்த கலெக்டர்
ADDED : ஜூலை 05, 2025 02:51 AM

சிவகாசி: சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால கட்டுமான பணிகளை கலெக்டர் சுகபுத்ரா ஆய்வு செய்தார்.
சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் 700 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் அமைக்க ரூ.61.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2024 ஆகஸ்ட் மாதம் பணிகள் தொடங்கி 17 துாண்கள் அமைக்கப்பட்டு, கிழக்கு பகுதியில் துாண்கள் இணைக்கப்பட்டு பாலம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
ரயில்வே துறை சார்பில் தண்டவாளத்திற்கு மேல் பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. மேற்கு பகுதியில் துாண்களை இணைக்கும் பணி நடக்கிறது. மேம்பால கட்டுமான பணிகள் 70 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்துள்ள நிலையில் கலெக்டர் சுகபுத்ரா பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேயர் சங்கீதா, அதிகாரிகள் உடன் இருந்தனர்.