sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தவிர்க்க உள்ளக குழு அமைக்க வேண்டும் கலெக்டர்  ஜெயசீலன் உத்தரவு

/

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தவிர்க்க உள்ளக குழு அமைக்க வேண்டும் கலெக்டர்  ஜெயசீலன் உத்தரவு

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தவிர்க்க உள்ளக குழு அமைக்க வேண்டும் கலெக்டர்  ஜெயசீலன் உத்தரவு

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தவிர்க்க உள்ளக குழு அமைக்க வேண்டும் கலெக்டர்  ஜெயசீலன் உத்தரவு


ADDED : ஏப் 18, 2025 05:27 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள் உள்ளக குழு அமைக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அரசு, தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லுாரிகள், பயிற்சி மையங்கள் என அனைத்து நிறுவனங்களும் www.tnswd-poshicc.tn.gov.in என்ற இணையதளத்தில் குழு விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

குழுவில் 50 சதவீதம் பெண்களாக இருக்க வேண்டும். ஒரு பெண் மூத்த அலுவலர் அல்லது பெண் ஊழியரே தலைவராக இருக்க வேண்டும். குறைந்தது 2 உறுப்பினர்கள் பெண்களின் நலனுக்காக பணியாற்றும் ஆர்வமிக்க நபர்களாக பணியாளர்களில் இருந்து நியமிக்க வேண்டும். ஒரு உறுப்பினர் பெண்களுக்கான குற்றங்களை தடுக்கும் பணிகளில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஒருவராக இருக்க வேண்டும்.

தண்டனைகள்


உள்ளக குழு அமைக்கப்படாத இடங்களுக்கு ரூ.50,000 அபராதமாக விதிக்கப்படும். பாலியல் புகார்கள் மீது எடுக்கப்படும் பரிந்துரைகளில் நடவடிக்கை எடுக்காமலும், கலெக்டருக்கு ஆண்டறிக்கை சமர்பிக்காமலும் இருப்பினும் அபராதம் விதிக்கப்படும்.

நிறுவனம், சட்டத்திற்கு உட்படாமல் மீண்டும் தவறிழைப்பின் அபராதத் தொகை இரட்டிப்பாக்கப்படுவதுடன், கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவர். பணியிட பதிவு அனுமதி ரத்து செய்யப்படுவதுடன், மீள பெறுதல், புதுப்பித்தல் செய்யப்படாது. இவ்வாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us