sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அரசு அங்கீகாரம் பெறாத கல்லுாரிகள் மாணவர்களை அணுகினால் நடவடிக்கை கலெக்டர் ஜெயசீலன் எச்சரிக்கை

/

அரசு அங்கீகாரம் பெறாத கல்லுாரிகள் மாணவர்களை அணுகினால் நடவடிக்கை கலெக்டர் ஜெயசீலன் எச்சரிக்கை

அரசு அங்கீகாரம் பெறாத கல்லுாரிகள் மாணவர்களை அணுகினால் நடவடிக்கை கலெக்டர் ஜெயசீலன் எச்சரிக்கை

அரசு அங்கீகாரம் பெறாத கல்லுாரிகள் மாணவர்களை அணுகினால் நடவடிக்கை கலெக்டர் ஜெயசீலன் எச்சரிக்கை


ADDED : பிப் 13, 2025 06:33 AM

Google News

ADDED : பிப் 13, 2025 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: கல்லுாரிகளுக்கு பள்ளி மாணவர்களின் விவரங்களை அளித்தலோ, அரசு அங்கீகாரம் பெறாத கல்லுாரிகள் மாணவர்களை அணுகினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவர்களை பொதுத்தேர்வு நடக்கும் போதும், தேர்வு முடிவுகள் வெளியான பின்பும் அரசு அங்கீகாரம் பெறாத தனியார் கல்வி நிறுவனங்கள், கல்லுாரிகள் அணுகி சேர்ப்பதாக தொடர்ந்து தகவல்கள் வருகின்றன.

ஒரு சில ஆசிரியர்கள் மாணவர்களின் விவரங்களை இது போன்ற கல்லுாரிகளுக்கு வழங்குவதாக புகார்கள் வருகின்றது. இவ்வாறு கல்லுாரிகளுக்கு மாணவர்களின் விவரங்களை அளிப்பதோ, சேர்க்கவோ கூடாது. மாணவர்கள் உயர்கல்வி குறித்த சந்தேகங்களை பள்ளி முதுகலை உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

கல்லுாரிகளுக்கு நேரடியாக மாணவர்களின் விவரங்களை அளித்தாலும், சேர்த்தாலும், அங்கீகாரம் இல்லாத கல்லுாரிகள் மாணவர்களை நேரடியாக அணுகினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us