sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நகராட்சி அனுமதியின்றி கட்டிய வணிக வளாகத்திற்கு சீல்

/

நகராட்சி அனுமதியின்றி கட்டிய வணிக வளாகத்திற்கு சீல்

நகராட்சி அனுமதியின்றி கட்டிய வணிக வளாகத்திற்கு சீல்

நகராட்சி அனுமதியின்றி கட்டிய வணிக வளாகத்திற்கு சீல்


ADDED : அக் 31, 2025 01:45 AM

Google News

ADDED : அக் 31, 2025 01:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் நகராட்சியின் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகக் கட்டடத்திற்கு நகரமைப்பு பிரிவினர் பூட்டி சீல் வைத்தனர். விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் வேலாயுதமடை ஊருணி உள்ளது. அதன் அருகில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் பேஸ்மென்ட் உடன் கூடிய 2 மாடி வணிக வளாக கட்டடம் கட்டும் பணி நடந்தது.

இதற்கு நகராட்சியில் முறையான வரைபட அனுமதி ஏதும் பெறவில்லை.எனவே, இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலர், நகராட்சியில் புகார் தெரிவித்தனர். அதன் பிறகே, நகரமைப்பு பிரிவினர் கட்டடம் கட்டுபவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். இருந்தபோதும், பணியை நிறுத்தவில்லை. தற்போதுகட்டுமானப் பணிகள் நிறைவடைந்து வரும் நிலையில் அதை பலருக்கு வாடகைக்கு விடவும் முன்னேற்பாடுகள் நடந்து வந்தது.

மின்சார வாரியத்தினர், மின் இணைப்பு வழங்கவும் முயற்சிகளைச் செய்தனர். இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் நகரமைப்பு ஆய்வாளர் ரூபா, முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை சீல் வைத்தார்.






      Dinamalar
      Follow us