sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

5 ஆண்டுகளாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையாக மாறிய சமுதாயக்கூடம்

/

5 ஆண்டுகளாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையாக மாறிய சமுதாயக்கூடம்

5 ஆண்டுகளாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையாக மாறிய சமுதாயக்கூடம்

5 ஆண்டுகளாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையாக மாறிய சமுதாயக்கூடம்


ADDED : மார் 19, 2025 06:29 AM

Google News

ADDED : மார் 19, 2025 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் நகராட்சி நாராயணமடம் தெருவில் 5 ஆண்டுகளாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையாக செயல்படும் சமுதாயக்கூடத்தால் அப்பகுதி மக்கள் சுப நிகழ்ச்சிகள் நடத்த அதிகளவிலான பணம் கொடுத்து தனியார் மண்டபங்களை நாட வேண்டியுள்ளது.

விருதுநகர் நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதியின் பின்புறம் நாராயணமடம் தெரு உள்ளது. இங்கு ரூ.30 லட்சத்தில் ஒருங்கிணைந்த குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2009ல் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது.

துவங்கிய சில ஆண்டுகள் மட்டுமே செயல்பட்ட இந்த சமுதாயக்கூடம் அதற்கு பின் முடங்கியது. இப்பகுதியை சுற்றிலும் நடுத்தர மக்கள் தான் அதிகம் உள்ளனர்.

2019ல் நகராட்சி அலுவலகத்தின் புதிய கட்டட கட்டுமான பணிகள் நடந்தது. இதற்காக நகராட்சி ஆவணங்கள் இந்த சமுதாயக்கூடத்தில் வைக்கப்பட்டது.

அதற்கு பின்னும் இதை செயல்படுத்த மனம் வராமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டுப்பதிவு இயந்திரங்களை இங்கு வைத்து பாதுகாத்து வருகின்றனர். எந்நேரமும் போலீஸ் ஒருவர் பணியில் இருக்கிறார்.

கடந்த ஆண்டு கூட பேரூராட்சி தேர்வுக்கான மறு ஓட்டு எண்ணிக்கை இங்கு நடந்தது குறிப்பிடதக்கது.

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை செயல்பட்டு வரும் நிலையில், தற்போதுவரை சமுதாயக்கூடத்தில் உள்ளஓட்டுப்பதிவு இயந்திரங்களை இடமாற்ற நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் முன்வரவில்லை.

இந்த சமுதாயக்கூடம் செயல்பட்டால், சுற்றுப்புற நடுத்தர மக்கள் அதிகம் பயன்பெறுவர். அருகில் உள்ள தனியார் மண்டபங்களின் வாடகை அதிகளவில் உள்ள சூழலில் இந்த சமுதாயக்கூடம் செயல்படும் பட்சத்தில் அது நகராட்சிக்கு நல்ல வருவாயாகவும் இருக்கும்.

இந்த சமுதாயக்கூடம் ஏதோ ஓட்டுப்பதிவு இயந்திரம் வைப்பறை போன்று நகராட்சி நிர்வாகம் பயன்படுத்தி வருவது வேதனை தருவதாக அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.

இதனால் மக்கள் கடும் பாதிப்பை சந்திக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த சமுதாயக்கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க வேண்டும்.

ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஓட்டுப்பதிவு கிட்டங்கிக்கு மாற்றம் செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us