sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வணிக வளாகம் கட்டும் பணி மீண்டும் துவக்கம்

/

வணிக வளாகம் கட்டும் பணி மீண்டும் துவக்கம்

வணிக வளாகம் கட்டும் பணி மீண்டும் துவக்கம்

வணிக வளாகம் கட்டும் பணி மீண்டும் துவக்கம்


ADDED : அக் 16, 2025 04:49 AM

Google News

ADDED : அக் 16, 2025 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் ரூ.5 கோடியில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி ஒரு ஆண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் தினமலர் நாளிதழில் செய்தி வெளியான பிறகு மீண்டும் பணிகள் துவங்கியது.

சிவகாசி மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்ட சாத்துார் ரோட்டில் பஸ் ஸ்டாண்டு அருகே வருவாய்துறைக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலம் நகராட்சி நிர்வாக துறைக்கு வழங்கப்பட்டது.

அந்த இடத்தில் 1.75 ஏக்கர் நிலத்தில் புதிய அலுவலகமும், மீதமுள்ள இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இந்த பணிகளுக்கு 2023 ஜூனில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்படி ரூ.5 கோடியில் 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 103 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கியது. 18 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டிய நிலையில், வணிக வளாகம் தரைத்தளம் மற்றும், முதல் தளத்துடன் 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 103 கடைகளுடன் கட்டப்பட்டு வந்தது.

ஒரு ஆண்டாக வணிக வளாகம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் கட்டடத்தில் மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறிவிட்டது. கட்டடம் முழுவதுமே காலி மது பாட்டில்கள் பிளாஸ்டிக் கப்புகள் கிடக்கிறது.

இதனால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து வணிக வளாகம் கட்டும் பணி மீண்டும் துவங்கியது.

கமிஷனர் சரவணன் கூறுகையில், நிதி பற்றாக்குறையால் தாமதம் அடைந்த வணிக வளாகம் கட்டும் பணி தற்போது நிதி ஒதுக்கப்பட்டு மீண்டும் துவங்கியுள்ளது. 2026 பிப்.,ல் பயன்பாட்டிற்கு வரும் ,என்றார்.






      Dinamalar
      Follow us