sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வெள்ளூரில் 3 மாதமாக குடிநீர் இல்லை

/

வெள்ளூரில் 3 மாதமாக குடிநீர் இல்லை

வெள்ளூரில் 3 மாதமாக குடிநீர் இல்லை

வெள்ளூரில் 3 மாதமாக குடிநீர் இல்லை


ADDED : அக் 16, 2025 04:50 AM

Google News

ADDED : அக் 16, 2025 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி அருகே வெள்ளூர் ஊராட்சியில் மூன்று மாதமாக குடிநீர் வராததை கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் தண்ணீருக்காக மக்கள் தவிக்கின்றனர்.

சிவகாசி அருகே வெள்ளூர் ஊராட்சி ஆதிதிராவிடர் கிழக்கு பகுதி, குமாரபுரம், அம்மன் கோவில்பட்டி கிழக்கு பகுதிகளுக்கு உள்ளூரிலுள்ள கிணற்றிலிருந்து போர்வெல் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்பு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கப் பட்டது.

தற்போது உள்ளூர் போர்வல் மூலமும் குடிநீர் வினியோகம் இல்லாத நிலையில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழும் மூன்று மாதமாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் இப்பகுதியில் குடிநீரை விலைக்கு வாங்கித் தான் பயன்படுத்த வேண்டி உள்ளது.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

தங்கப்பாண்டியன் ஊராட்சி செயலர், ஒப்பந்ததாரர் குழாய்களை சரியாக பதிக்காததால் வெள்ளூர் கிழக்குப் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்.

குழாய்கள் சரி செய்யப்பட்டு சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.






      Dinamalar
      Follow us