sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆலோசனை கூட்டம்

/

சிவகாசியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆலோசனை கூட்டம்

சிவகாசியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆலோசனை கூட்டம்

சிவகாசியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆலோசனை கூட்டம்


ADDED : செப் 22, 2024 03:46 AM

Google News

ADDED : செப் 22, 2024 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசியில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வரும் நிலையில், நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து பள்ளி, கல்லுாரி நிர்வாகிகள் , தொழில்துறையினர் உடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் டி.எஸ்.பி., பாஸ்கர் பேசியதாவது, சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால், டூ வீலர்கள் உட்பட அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் நகரில் முக்கிய ரோடுகளில் கடும் போக்குவரத்தினர் நெரிசல் ஏற்படுகிறது. ரயில்வே கேட் மூடப்படும் நேரங்களில் வாகனங்கள் இவ்வழியாக வருவதை தவிர்க்க வேண்டும்.

காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், மேம்பால பணிகள் நிறைவடையும் வரை பள்ளிகளின் நேரத்தை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். ரயில்வே மேம்பால பணிகள் நிறைவடையும் வரை, சற்று துாரமாக இருந்தாலும் மக்கள் மாற்றுப்பாதை வழியாக சென்று காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார். பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள், நிர்வாகிகள், பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர், வர்த்தக சங்கத்தினர், ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us