sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்டேனோகிராபர் பதவி உயர்வில் முரண்பாடு

/

ஸ்டேனோகிராபர் பதவி உயர்வில் முரண்பாடு

ஸ்டேனோகிராபர் பதவி உயர்வில் முரண்பாடு

ஸ்டேனோகிராபர் பதவி உயர்வில் முரண்பாடு


ADDED : செப் 24, 2025 08:36 AM

Google News

ADDED : செப் 24, 2025 08:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : மருத்துவம், கல்வித்துறைகளில் பணிபுரியும் கிரோடு 1 ஸ்டேனோகிராபர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

இவர்களுக்கு மற்ற அரசு துறைகளில் பணிபுரியும் ஸ்டேனோகிராபர்கள் போலவே ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை சீரான பதவி உயர்வு வழங்க வேண்டமென விரும்புகின்றனர்.

தமிழக அரசு துறைகளில் கிரேடு 1 ஸ்டேனோகிராபர்களாக பணியில் சேர்பவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிரேடு 2, கிரேடு 3 ஆகிய பதவி உயர்வுகள் வழங்கப்படுகிறது. ஆனால் மருத்துவம், கல்வித்துறைகளில் கிரேடு 1 ஸ்டேனோகிராபர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

மருத்துவம், கல்வி துறைகளில் பணியில் இருப்பவர்களை விட மற்ற அரசு துறைகளில் பின்னால் பணியில் சேர்ந்தவர்கள் விரைவில் பதவி உயர்வு பெறுகின்றனர். ஒரே அரசின் பல்வேறு துறைகளில் சமநிலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இடையே காட்டப்படும் பாரபட்சத்தால் மருத்துவம், கல்வி துறை கிரேடு 1 ஸ்டேனோகிராபர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் மருத்துவம், கல்வி துறைகளில் ஏற்கனவே பதவி உயர்வு வேண்டாம் என தெரிவித்தவர்களின் பெயர்கள் ஒவ்வொரு முறையும் பதவி உயர்வுக்கான பட்டியலில் மீண்டும் இடம் பெறுவதால் மற்றவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காமல் போகிறது.

இதனால் ஆண்டு தோறும் கிடைக்கும் உதவி உயர்வை வைத்து வங்கி கடன், குழந்தைகளுக்கான கல்வி செலவு, குடும்ப செலவுகளை சிரமத்துடன் சமாளிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். எனவே மருத்துவம், கல்வி துறைகளில் பணிபுரியும் ஸ்டேனோகிராபர்களுக்கு பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை களைந்து மற்ற அரசு துறைகளில் பணிபுரிபவர்களுக்கான பதவி உயர்வு போல சீரான பதவி உயர்வு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us