sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

காட்டுப்பன்றிகளால் மக்காச்சோள பயிர் பாதிப்பு: --விவசாயிகள் வேதனை

/

காட்டுப்பன்றிகளால் மக்காச்சோள பயிர் பாதிப்பு: --விவசாயிகள் வேதனை

காட்டுப்பன்றிகளால் மக்காச்சோள பயிர் பாதிப்பு: --விவசாயிகள் வேதனை

காட்டுப்பன்றிகளால் மக்காச்சோள பயிர் பாதிப்பு: --விவசாயிகள் வேதனை


ADDED : நவ 21, 2024 04:02 AM

Google News

ADDED : நவ 21, 2024 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே மக்காச்சோள பயிர்களை சேதம் செய்யும் காட்டுப்பன்றி மான்களை கட்டுப்படுத்துவதுடன், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்திரப்பட்டி அடுத்த நரிக்குளம் சிவலிங்காபுரம், அருணாச்சலபுரம், வடகரை, மேட்டு வடகரை, என். புதுார், செல்லம்பட்டி, கொருக்காம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் மக்காச்சோளப் பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். தேவி ஆற்றின் நீர்வழிப் பாதை, நரி குளம், சிவலிங்காபுரம் உள்ளிட்ட கண்மாய்களின் கருவேல மர புதர்களில் பதுங்கும் காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட விலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

நரிக்குளத்தை சேர்ந்த கண்ணதாசன், முத்து, சண்முகவேல், முத்துமாரியம்மன் உள்ளிட்டோரின் மக்காச்சோள சாகுபடி நிலங்களில் இரவு நேரம் காட்டு பன்றிகள் புகுந்து விளைந்துள்ள மக்காச்சோள கதிர்களை தின்று வருகின்றன. மான்களும் சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us