sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

திருத்தங்கலில் அடிப்படை வசதிகேட்டு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

/

திருத்தங்கலில் அடிப்படை வசதிகேட்டு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

திருத்தங்கலில் அடிப்படை வசதிகேட்டு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

திருத்தங்கலில் அடிப்படை வசதிகேட்டு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை


ADDED : செப் 30, 2025 03:48 AM

Google News

ADDED : செப் 30, 2025 03:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: திருத்தங்கல் பகுதியில் அடிப்படை வசதி கோரி நான்கு ஆண்டுகளாக கண்டு கொள்ளாததை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் சிவகாசி மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக்கோரி வி.சி.கட்சி சார்பில் காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் செல்வின் ஏசுதாஸ் தலைமை வகித்தார். மனிதநேயன், நவமணி, திலீபன் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் எல்லாளன் பேசினார்.

இதில் திருத்தங்கல் பகுதியில் சுகாதார வளாகம், கழிவுநீர் கால்வாய், ரோடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதன்பின் மாநகராட்சி அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அளிக்க சென்றனர்.

அங்கு அதிகாரிகள் இல்லாததால் மாநகராட்சி அலுவலகம் முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் மேயர் சங்கீதா அலுவலகம் வந்ததை அடுத்து, அவரிடம் மனு அளித்து சென்றனர்.






      Dinamalar
      Follow us