sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசி மாநகராட்சி பள்ளியில் வகுப்பறை கட்டடங்கள் சேதம்

/

சிவகாசி மாநகராட்சி பள்ளியில் வகுப்பறை கட்டடங்கள் சேதம்

சிவகாசி மாநகராட்சி பள்ளியில் வகுப்பறை கட்டடங்கள் சேதம்

சிவகாசி மாநகராட்சி பள்ளியில் வகுப்பறை கட்டடங்கள் சேதம்


ADDED : ஜன 01, 2025 07:16 AM

Google News

ADDED : ஜன 01, 2025 07:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி மாநகராட்சிக்கு சொந்தமான அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டடங்கள் சேதமடைந்திருப்பதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

சிவகாசி மாநகராட்சிக்கு சொந்தமான அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இரு வகுப்பறை கட்டடங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.

அதில் ஒரு வகுப்பறை கட்டடம் தற்போதும் பயன்பாட்டில் உள்ளது.

இக்கட்டடத்தில் சிமெண்ட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றது.

வகுப்பு நடைபெறும் போது கட்டடம் இடிந்து விழுந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மழைக்காலங்களில் அவ்வப்போது கட்டடம் சேதம் அடைந்து சிமெண்ட் பூச்சு கீழே விழுந்து வருகின்றது. சேதமடைந்த மற்றொரு வகுப்பறை கட்டடத்தின் அருகே மாணவர்கள் விபரீதம் அறியாமல் விளையாடுகின்றனர்.

எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னர் சேதமடைந்த கட்டடங்களை சீரமைக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us