sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சேதமடைந்த பால தடுப்புச் சுவர் வாகன ஓட்டிகள் அச்சம்

/

சேதமடைந்த பால தடுப்புச் சுவர் வாகன ஓட்டிகள் அச்சம்

சேதமடைந்த பால தடுப்புச் சுவர் வாகன ஓட்டிகள் அச்சம்

சேதமடைந்த பால தடுப்புச் சுவர் வாகன ஓட்டிகள் அச்சம்


ADDED : மார் 17, 2024 12:18 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி - திருத்தங்கல் ரோட்டில் கிருதுமால் ஓடையில் உள்ள பாலத்தின் தடுப்புச் சுவர் சேதத்தால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.

சிவகாசி முருகன் கோயிலில் இருந்து திருத்தங்கல் செல்லும் ரோட்டில் கிருதுமால் ஓடை உள்ளது. இந்த ஓடை வழியாகத்தான் நகருக்குள் அனைத்து வாகனங்களும் வந்து செல்கின்றன. இந்நிலையில் ஓடையில் உள்ள பாலத்தின் தடுப்புச் சுவர் சேதம் அடைந்துள்ளது.

பாலமும் குறுகியதாக இருப்பதால் வாகனங்கள் எளிதில் விலகிச் செல்லவும் முடியவில்லை.

வாகனங்கள் தெரியாமல் பாலத்தின் தடுப்புச் சுவரை ஒட்டிச் சென்றாலே கீழே விழுந்து விடும் அபாயம் உள்ளது.

இதனால் எந்நேரமும் போக்குவரத்து நிறைந்து இருக்கும் இந்த பாலத்தில் சேதம் அடைந்த தடுப்புச் சுவரால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.

எனவே உடனடியாக பாலத்தின் தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us