sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சேதமான வாறுகால், ரோட்டில் தேங்கும் தண்ணீர்: அவதியில் வாகன ஓட்டிகள்

/

சேதமான வாறுகால், ரோட்டில் தேங்கும் தண்ணீர்: அவதியில் வாகன ஓட்டிகள்

சேதமான வாறுகால், ரோட்டில் தேங்கும் தண்ணீர்: அவதியில் வாகன ஓட்டிகள்

சேதமான வாறுகால், ரோட்டில் தேங்கும் தண்ணீர்: அவதியில் வாகன ஓட்டிகள்


ADDED : அக் 22, 2024 04:35 AM

Google News

ADDED : அக் 22, 2024 04:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசியில் இருந்து தட்டாவூரணி வழியாக விளாம்பட்டி செல்லும் ரோட்டில் இருபுறமும் உள்ள வாறுகால் சேதமடைந்து இருப்பதால் மழை நீர் செல்ல வழி இல்லை. வாறுகாலை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிவகாசியிலிருந்து தட்டாவூரணி வழியாக விளாம்பட்டி செல்லும் ரோட்டில் இருபுறமும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வாறுகால் அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் தண்ணீர் வாறுகால் வழியாக வெளியேறி கண்மாய், குளத்திற்கு சென்றது. ஆனால் தற்போது ரோட்டில் இருபுறமும் உள்ள வாறுகால் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. தவிர முட்புதர்களும் ஆக்கிரமித்துள்ளது.

தவிர குப்பைகளையும் வாறுகாலில் கொட்டி விடுகின்றனர். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழி இன்றி ரோட்டில் ஓடுகின்றது. முழங்கால் அளவிற்கு தண்ணீர் ரோட்டில் தேங்கி விடுவதால் டூ வீலர் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகின்றது. எனவே இப்பகுதியில் உடனடியாக வாறுகாலை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us