/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான ரேஷன் கடை கட்டடம் மாணவர்கள், மக்கள் அச்சம்
/
சேதமான ரேஷன் கடை கட்டடம் மாணவர்கள், மக்கள் அச்சம்
ADDED : நவ 21, 2024 04:10 AM

சிவகாசி: சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியில் ரோட்டோரத்தில் சேதம் அடைந்துள்ள ரேஷன் கடையால் பள்ளி மாணவர்கள், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடை கட்டப்பட்டது. இக்கட்டடம் சேதம் அடைந்த நிலையில் தற்போது பயன்பாட்டில் இல்லை. சேதமடைந்த இக்கட்டடத்தை கடந்துதான் அரசு பள்ளிக்கு மாணவர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நோயாளிகள், குடியிருப்பு வாசிகள் சென்று வருகின்றனர்.
சிறுவர்கள் விபரீதம் அறியாமல் சேதம் அடைந்த இக்கட்டடத்தின் அருகே விளையாடுகின்றனர். பள்ளி மாணவர்கள் நடந்து செல்லும் போது, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மக்கள் செல்லும்போது கட்டடம் இடிந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும். எனவே உடனடியாக சேதமடைந்த கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.