sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நீர் நிலைகளில் ஆபத்தான குளியல்--

/

நீர் நிலைகளில் ஆபத்தான குளியல்--

நீர் நிலைகளில் ஆபத்தான குளியல்--

நீர் நிலைகளில் ஆபத்தான குளியல்--


ADDED : ஜன 18, 2024 05:19 AM

Google News

ADDED : ஜன 18, 2024 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நீர்நிலைகள் நிரம்பிய நிலையில் உள்ளதால் விபரீதம் தெரியாமல் குளியல் போடும் சிறுவர்கள் ஆபத்தை சந்திக்கின்றனர்.

ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்த மழையால் கண்மாய்கள், நீரோடைகள், ஆறுகளில் நீர்வரத்து அதிகம் காணப்படுகிறது. பொங்கலை ஒட்டி பள்ளி தொடர் விடுமுறையால் மாணவர்கள் சிறுவர்கள் ஆர்வம் மிகுதியால் உரிய பாதுகாப்பும், கண்காணிப்பும் இன்றி நீச்சல் உள்ளிட்ட சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில இடங்களில் ஆழம் இல்லை என்றாலும் அதிகமான நீர் போக்கு, சேறு உள்ளிட்ட ஆபத்துகளால் நீச்சல் தெரிந்தவராக இருப்பினும் சேற்றில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது.

பெரியவர்களின் கண்காணிப்பின்றி சிறுவர்கள் விபரீதம் தெரியாமல் இத்தகைய விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் நிலைகளில் சிக்கி சிறுவர்கள் உயிரிழக்கும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

விடுமுறை தினங்களில் சிறுவர்களை பெற்றோர் தங்கள் முழு கட்டுப்பாட்டில் வைத்து கண்காணிப்பதோடு பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us