sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைக்கு தனிப்பிரிவு 38 படுக்கைகளுடன் துவங்க முடிவு

/

விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைக்கு தனிப்பிரிவு 38 படுக்கைகளுடன் துவங்க முடிவு

விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைக்கு தனிப்பிரிவு 38 படுக்கைகளுடன் துவங்க முடிவு

விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைக்கு தனிப்பிரிவு 38 படுக்கைகளுடன் துவங்க முடிவு


ADDED : டிச 13, 2024 03:47 AM

Google News

ADDED : டிச 13, 2024 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைக்கு 38 படுக்கைகளுடன் தனி பிரிவு துவங்குவதற்கான பணிகள் நடக்கிறது.

விருதுநகர், சிவகாசி, சாத்துார், ஸ்ரீவில்லிப்புத்துார், அதனை சுற்றிய பகுதிகளில் அதிக அளவில் பட்டாசு தயாரிப்பு ஆலைகள் செயல்படுகின்றன. இங்கு தயாரிப்பு பணிகள் துவங்கி முடிவதற்குள் பல விபத்துக்கள் நடக்கிறது. விபத்துக்களில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

தற்போது விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தேசிய சுகாதார இயக்கத்தின் நிதியில் இருந்து 9 ஆயிரம் சதுர அடியில் ரூ. 1.50 கோடியில் 38 படுக்கைகளுடன் தீக்காயத்திற்கான தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்படவுள்ளது.

இந்த தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர், செவிலியர், பணியாளருக்கு தனி அறை, கழிப்பறை, குளியலறை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது. இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் தனி கவனத்துடன் வழங்கப்படவுள்ளது.

இதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்து தீக்காயம் தீவிர சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டால் பட்டாசு விபத்துக்களில் காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் எளிதாக கிடைக்கும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us