sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாணவர்களுக்கு சீருடைகள் வழங்க தாமதம்: பல கட்டமாக வழங்குவதால் தேக்கம்

/

மாணவர்களுக்கு சீருடைகள் வழங்க தாமதம்: பல கட்டமாக வழங்குவதால் தேக்கம்

மாணவர்களுக்கு சீருடைகள் வழங்க தாமதம்: பல கட்டமாக வழங்குவதால் தேக்கம்

மாணவர்களுக்கு சீருடைகள் வழங்க தாமதம்: பல கட்டமாக வழங்குவதால் தேக்கம்


ADDED : ஜூன் 04, 2025 12:37 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை,: பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் சீருடைகளை கால தாமதமாக வழங்குவதாலும், அவற்றை விநியோகம் செய்வதில் அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் அலட்சியம் காட்டுவதாலும் கல்வி அலுவலகத்தில் சீருடைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநுால், புத்தகப்பை, காலணிகள், கணித உபகரணம், பென்சில்கள், வரைபடம் உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது

கல்வித்துறை மூலம் வழங்கப்படும் இந்த உபகரணங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது. பொருட்களை பள்ளிகளுக்கு கொண்டு சேர்ப்பதற்கான செலவையும் அரசே ஏற்றுக் கொள்கிறது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் அவற்றை மாணவர்களுக்கு வழங்குவர். சீருடைகள் மட்டும் சமூகநலத்துறை மூலம் அந்தந்த வட்டார கல்வி அலுவலகங்களில் சேர்க்கப்படுகிறது. அங்கிருந்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் அவற்றை எடுத்துச் செல்வர்.

சீருடைகள் 4 கட்டங்களாக வழங்கப்படுகிறது. கல்வித்துறை மூலம் வழங்கப்படும் உபகரணங்கள் 2, 3 கட்டங்களாக பள்ளியில் சேர்க்கப்படுகிறது.

சீருடைகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து கொண்டு செல்ல கஷ்டப்படுகின்றனர். பெரும்பாலும் பெண் தலைமை ஆசிரியர்கள் இருப்பதால் சீருடைகளை எடுத்துச் செல்வதில் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில் திருச்சுழி வட்டார கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் துவக்க, நடுநிலை என 100 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 2024 ற்கான சீருடைகளை பெரும்பாலான பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாங்கிச் சென்று விட்டனர். ஆனால் செங்குளம் அரசு நடுநிலைப்பள்ளி, சித்தலக்குண்டு, உடையனம்பட்டி, பூலாங்கால் கீழப்பட்டி உள்ளிட்ட துவக்கப்பள்ளிகளின் மாணவர்களுக்கு 300 க்கும் மேற்பட்ட சீருடைகள் வழங்கப்படாமல் வட்டார கல்வி அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களின் அலட்சியத்தால் சீருடைகள் அலுவலகத்தில் தேங்கி கிடக்கிறது.

விடுமுறை முடிந்து, கல்வியாண்டு துவங்குவதற்கு முன்பே, அரசு வழங்கும் உபகரணங்கள், சீருடைகளை அந்தந்த பள்ளிகளுக்கு நேரடியாக ஒரே கட்டத்தில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதில்லை. பள்ளிகள் துவங்கி அரையாண்டு தேர்வுகள் முடிவடையும் வரையில் சீருடைகளை வழங்குவதால் தலைமை ஆசிரியர்களால் உரிய நேரத்தில் விநியோகம் செய்ய முடிவதில்லை.

உரிய நேரத்தில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், சீருடைகளை ஒரே கட்டத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பவநந்தீஸ்வரன், திருச்சுழி வட்டார கல்வி அலுவலர்: மாணவர்களுக்கு வழங்கும் இலவச உபகரணங்கள் அரசு வழங்கியவுடன் மாணவர்களுக்கு உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்குகிறோம். சீருடைகள் மட்டும் சமூக நலத்துறை மூலம் வழங்கப்படுவதால், அவற்றை தலைமை ஆசிரியர்களே அலுவலகத்தில் பெற்றுக் கொண்டு வழங்குகின்றனர். ஒரு சில பள்ளிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உரிய நேரத்தில் மாணவர்களிடம் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.






      Dinamalar
      Follow us