நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் அமைச்சர் கலந்து கொண்டார்.
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார்
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 302 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கினார்.
முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி, நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.